48வது சென்னை புத்தகக் காட்சி நேற்று முன் தினம் தொடங்கி இருக்கிறது, அனைத்து எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக ஆர்வலர்களுக்கும் எனது அன்பின் வாழ்த்துகள். இந்த புத்தகக் காட்சியில் நான் எழுதிய புத்தகங்கள் இரண்டு இடம் பெற்றிருப்பதில் பெருமகிழ்ச்சி. எனது புத்தகங்கள் கிடைக்குமிடம்: ஒரே ஒரு ராஜா ஒரு கோடி கதைகள் அரங்கு எண் 72, நாற்கரம் பதிப்பகம். கொலசாமியும் கோனிகா மினோல்டாவும் அரங்கு எண் 637, டிரவிடியன் ஸ்டாக் வாய்ப்புள்ள நண்பர்களும் உறவுகளும் புத்தகங்கள் வாங்கி வாசித்து கருத்து பகிருங்கள். அன்பின் நன்றி. பேரன்புடன், முருகன் மந்திரம் #MuruganManthiram #MMBooks #MuruganManthiramBooks #Narkaram #DravidianStock #OreyOruRaajaOruKodiKathaigal #KolasaamiyumKonicaMinoltaavum #books #tamilbooks #ChennaiBookFair #chennaibookfair2025 #atheism #atheists #Ilaiyaraaja #இளையராஜா
சித்ராவின் புது ப்ளவுஸ்! - முருகன் மந்திரம் சித்ரா இப்பவும் அழகா தான் இருக்கா. ஆனா முன்ன மாதிரி இப்போ பேசுறதில்லை. சித்ரா மகனுக்கு இப்போ பத்து வயசு இருக்கும். ப்ரோ’ன்னு தான் ஆரம்பத்துல கூப்டுவா. அதுக்கு அப்புறம் திக் ப்ரெண்ட் ஆனா. இப்பல்லாம் எப்ப சித்ராவை பார்த்தாலும் அன்னைக்கு அவ அப்டி பண்ணப்போ நானும் சரியா இருந்துருக்கணும். அதுதான் முதல்ல தோணும். அட போடா... இப்போ ஃபீல் பண்ணி எதுக்கு..? மதன் தன்னோடு தானே பேசிக்கொண்டிருக்கிறான். அவன் தனக்கு தானே அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் அந்த சம்பவம் உங்களுக்கும் தெரிய வேண்டும் என ப்ரியப்படுகிறான். … டிசம்பர் கடைசி நாள். ஊரெல்லாம் ஒரு பரபரப்பும் கொண்டாட்டமும் தெரிந்தது. 12 மணிக்கு இன்னும் முப்பத்தைந்து நிமிடம் இருந்தது. வழக்கமாக சீக்கிரமே உறங்கிவிடும் ஊர்… அன்று விழித்திருந்தது. கொண்டாட்டம் போட காத்திருப்பவர்களும் அவர்களுக்கு கம்பெனி கொடுக்கவும், அவர்களை ரசிப்பதற்கு காத்திருந்தவர்களும் விழித்திருந்தார்கள். மதனின் மனைவி அனிதா குழந்தையுடன் தோழி ஜான்ஸி வீட்டுக்கு சென்றிருந்தாள். தோழி வீட்டில் நியூ இயர் ச...
Comments
Post a Comment